search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி வகுப்பு"

    • ராமநாதபுரத்தில் போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
    • பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக பல்வேறு வகையான போட்டி தேர்வு களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் வெளியிடப் பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspectors of Police (Taluk, Armed Reserve, TSP & Station Officer 2023) பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 743 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1.7.2023 தேதியில் குறைந்த பட்சம் 20 வயது அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்கு டியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்க ளுக்கு 47 வயது வரையிலும் இருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500 ஆகும்.

    இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அலுவலக தொலைபேசி எண் 04567-230160 மூலமாகவோ, 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக வோ, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும்.

    திருப்பூர் :

    கடந்த 8ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ஒரு மாதம் இருப்பதால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் வாயிலாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும். தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர் விபரத்தை வகுப்பாசிரியர் மூலம் சேகரித்து அவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஊக்கப்படுத்த வேண்டும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் உதவியோடு ஆலோசனைகளை வழங்கி துணைத்தேர்வெழுத ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆசிரியர் பணியிடம் சூழலுக்கு தக்கவாறு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேவையான உரிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். பயிற்சி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அடுத்த வாரம் அல்லது மே இறுதியில் துணைத்தேர்வு எழுத உள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை செய்து வருகிறது. பிளஸ் -2 தேர்வு முடிவு 8-ந் தேதி வெளியாகிய நிலையில் தேர்ச்சி பெறாத தேர்வுக்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 17ந்தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் நாளை 23-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • தொலைபேசி எண் 04567-230160ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான பணியாளர் தேர்வாணையம் (SSC), ெரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது.

    இங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் உள் வளாக பயிற்சி நடைபெற உள்ளது. விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2248524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

    • போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது.

    இத்தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 615 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500- ஆகும்.

    இந்த போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 17.5.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவும் அல்லது 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரடியாகவோ தொடர்பு கொண்டு பங்கேற்கலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

    • மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டது.
    • விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    கள்ளக்குறிச்சி:

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டது.

    அதன்படி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி, குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

    காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க மே 3-ந்தேதியும், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 5-ந்தேதியுமாகும்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

    விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்க ளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெய சீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம உதவி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    அவர்களுக்கான அடிப்ப டை பயிற்சி வகுப்பு இன்று தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள், வருவாய்த்துறை யின் கிராம அளவிலான திட்டங்களை செயல் படுத்துதல், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு தொ டர்பாக பிரச்சனைகளை ஆரம்ப கால கட்டங்களின் கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கிராமங்க ளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்(பொது) சிவகுமார், 116 கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும் முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலி யிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக 17.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2023 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்படும். எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9499055908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
    • வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் சார்பில் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிராம பகுதிகளுக்கு சென்று தொழில் மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார், ஒன்றிய குழு துணைத் தலைவர் தீனதயாளன், பிடிஓ வேதமுத்து ஆகியோர் மு்னிலை வகித்தனர்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் கோமதி கலந்துகொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தொழில் மையம் சார்பில் வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து கூறுகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

    மேலும் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பேசுகையில் தமிழ்நாடு அரசால் வழங்கக்கூடிய தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வதற்காக வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் தொழில்ம யத்தினை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    தொழில் மையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சுயதொழில் பயிற்சி வகுப்பு நடந்தது.
    • திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ரோட்டரி கிளப் ஆப் மல்லி, அரைஸ் டிரஸ்ட் சார்பில் பெண்களுக் கான சுயதொழில் பயிற்சி வகுப்பு மல்லியில் நடந்தது. ரோட்டரி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். டிரஸ்ட் தலைவர்கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார்.

    ரோட்டரி உதவி ஆளுநர் முத்துராமலிங்ககுமார், முன்னாள் உதவி ஆளுநர் ராஜேஷ் கண்ணன், ரோட்டரி நிர்வாகி ஜெயராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திட்ட இயக்குநர்கள் சுகப்பிரியா, தவமணி, விஜயலட்சுமி பங்கேற்றனர். ரோட்டரி செயலர் ஜாய்ஸ்மேரி நன்றி கூறினார்.

    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 22-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வருகிற 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தொடர்புக்கு 04562-293613.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×